ஆவுடையார் கோயிலில் தூண்களில் நவக்கிரகம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே ஆவுடையார் கோயிலில் உள்ள ஆத்மநாத சுவாமி கோயிலில் நவக்கிரகங்களை தனியாக சிலை வடிவில் தரிசிக்காமல் கோயில் வளாகத்தில் உள்ள தூண்களில் நவக்கிரகங்களை தரிசிக்கும் சிறப்பு பெற்ற கோயிலாக உள்ளது
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் நகரில் மதுரை பாண்டிய மன்னரிடம் முதலமைச்சராக இருந்த மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட ஆத்மநாத சுவாமி கோயில் உள்ளது இக்கோயில் மற்ற சிவன் கோயில்களை விட மாறுபட்டு காணப்படும் இங்கு நடைபெறும் பூஜைகளும் வழிபாடுகளும் பிற கோயிலை விட மாறுபட்டு காணப்படும்
சிறப்பான நிலையில் உள்ள இந்த சிவன் கோவிலில் நவக்கிரகங்களை தூண்களிலேயே நாம் தரிசனம் செய்யலாம் மற்ற திருக்கோயில்களில் தனித்தனியாக இருக்கும்
ஆனால் இங்கு தூண்களில் திருக்கடையூர் காலசம்ஹாரமூர்த்தி திருவண்ணாமலை திருப்பாத மூர்த்தி திருக்காளத்தி சந்திரன் மங்கள விநாயகர் சூரியன் உஷா தேவி பிரத்தி உஷா தேவி சுக்கிரன் செவ்வாய் குரு ராகு கேது சனி பகவான் ஆகிய நவ கிரகங்களை தரிசனம் செய்யலாம் இந்த சிறப்பு ஆவுடையார் கோவிலில் மட்டுமே உள்ளது
( இந்த கருத்தை படிப்பவர்கள் படித்துவிட்டு தங்களின் கருத்துக்களை பதிவுசெய்யவும்)
Comments
Post a Comment