திருச்செந்தூர் கந்த சஷ்டி விழா
திருச்செந்துாரில் கந்த சஷ்டி விழா. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் உலக பிரசித்தி பெற்ற கந்த சஷ்டி விழா 8ந்தேதி துவங்கியது. துாத்துக்குடி மாவட்டம் திருச்செந்துாரில் உலக பிரசித்தி பெற்ற சுப்பிரமணியசுவாமி கோயில் உள்ளது.இக்கோயிலில் ஆண்டுதோறும் கந்த சஷ்டி விழா நடக்கும் அதன்படி 8ந்தேதி அதிகாலை திருக்கோயில் 1 மணிக்கு திறக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது.அதனை தொடர்ந்து அதிகாலை 1.30 மணிக்கு விஸ்வருப தீபாரதனையும் 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும் நடந்தது. அதனை தொடர்ந்து காலை 5.30மணிக்கு ஜெயந்திநாதர் வள்ளி தெய்வானையுடன் முதல்பிரகாரத்தில் எழுந்தருளி யாகசாலை பூஜை நடந்தது .அதனை தொடர்ந்து கோயில் நிர்வாகத்திடம் சிவாச்சாரியார்கள் அனுமதி வாங்கும் நிகழ்வும் 12 மணிக்கு தீபாரதனையும் தொடர்ந்து மாலை 4 மணிக்கு சுவாமி தங்கரதத்தில் வீதி உலா நடந்தது. தொடர்ந்து தினமும் காலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு யாகசாலைபூஜையும் நடைபெறவுள்ளது.பக்தர்கள் கடலில் நீராடி நாழிக்கிணற்றில் நீராடி கோயில் வளாகத்தில் விரதமிருந்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் 13ந்தேதி நடக்கிறது. 13ந்தேதி க...